கடலூர், ஆக.26-
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் சனிக்கிழமையன்று (ஆக.26) ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தை பார்வையிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் பொதுநல இயக்கங்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் பார்வையிட்டோம். தென்னக ரயில்வேயில் 75 ரயில் நிலை யங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் ஒன்று. அந்த வரைபடத்தின் மீதான கருத்துக்களை தெரிவித்துள்ளோம்.
பயணிகளின் நலனை மையப் படுத்தி செய்ய வேண்டிய மாற்றங்க ளுக்கான ஆலோசனைகளை சொல்லி உள்ளோம். திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலைய மேம்பாடு பணி இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கப்பட உள்ளது. உயர் அதி காரியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தெரிவித்துள்ளேன்.
ரயில் நிலையத்திற்கு வந்து போகின்ற ரயில்கள், நின்று செல்கின்ற ரயில்கள், கூடுதல் ரயில்கள் சம்பந்த மாக பத்துக்கு மேற்பட்ட கோரிக்கை கள் கொடுத்துள்ளனர். அனைத்தும் ரயில்வே போர்டு எடுக்க வேண்டிய முடிவுகள். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ரயில்வே போர்டிடம் வலியுறுத்துவேன். இதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூடுதல் ரயில் வந்து போவதற்கும், ரயில்கள் நின்று செல்வதற்கும் நிச்சயம் வலியுறுத்துவேன்.
ரயில் நிலையத்திற்கு திருப்பாதிரிப் புலியூர் என்பதற்கு பதிலாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ரயில்வே துறை அதிகாரியிடம், மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவாக அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்வேன் இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போதுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், கடலூர் மாவட்ட செயலாளர் கோ. மாதவன், மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கருப்பையன், நகர செயலாளர் ஆர்.அமர்நாத், சிதம்பரம் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாநகர குழு உறுப்பி னர்கள் தமிழ்மணி, கருணாகரன், ஸ்டாலின், சாந்தகுமாரி,
இந்திய தேசிய காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் சந்திரசேகரன், விடுதலை சிறுத்தை கள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட செய லாளர் செந்தில், வழக்கறிஞர் திரு மார்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் குளோப், திராவிட கழக மாவட்ட தலைவர் எழிலேந்தி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரஹீம்,கடலூர் மாநகர பொதுநல கூட்டமைப்பு தலைவர் ரவி, மீனவர் பேரவை தலைவர் சுப்பராயன், தனியார் பஸ் போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தலைவர் குரு ராமலிங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட செயலாளர் பால்கி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் பேராசிரியர் ராஜா,
கடலூர் ரயில் பயணிகள் சங்கம் சார்பாக பிரபாகரன்,கடலூர் ரயில்வே நிலைய அதிகாரி வாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.