districts

திண்டிவனம் அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

திண்டிவனம், ஆக. 18-  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மேல் பாக்கத்தில் உள்ளது அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி. இந்த கல்லூரியில் சுற்றுவட்டார கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகின்றனர். நடப்பு (2022-23) கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வருகிற 24 ஆம் தேதி புதன்கிழமை துவங்குகிறது. முதல் நாளில்ல இளநிலை கணிதம். புள்ளியியல், இயற்பியல்,வேதியியல், தாவரவியல், கணினி அறிவியல் மற்றும் அனைத்து அறிவியியல் பாடப் பிரிவுகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.  இரண்டாவது நாளான ஆக.25 அன்று இளங்கலை வரலாறு, வணிகவியியல், பி.பி.ஏ, அனைத்து கலைப் பாடப்பிரிவுகள் மற்றும் இளங்கலை தமிழ், ஆங்கிலம் இலக்கியம் ஆகிய பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் அனைவரும் காலை9.30 மணிக்குள் கல்லூரிக்குள் வந்துவிடவேண்டும். முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்,பெற்றோரை உடன் அழைத்து வரவேண்டும். பத்தாம் வகுப்பு. பதினோராம் வகுப்பு, பன்னியிரண்டாம் வகுப்புமதிப்பெண் அசல் சான்று, பள்ளி மாற்றுச் சான்று அசல் அவசியம் கொண்டு வரவேண்டும். குறிப்பாக. கலந்தாய்வில் சேர்கைக்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் உரிய கட்டணத்தை அன்றே ரொக்கமாக செலுத்த வேண்டும் என்று கல்லூரி முதல்வர் முனைவர் தி. அறிவுடைநம்பி தெரிவித்திருக்கிறார்.

;