districts

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையன் மீது குண்டர் சட்டம்

திருவண்ணாமலை,ஜூன் 8-

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையில் கைது செய்யப்பட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

     அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆசிப் ஜாவேத் (30) திருண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக இந்த கொள்ளையனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.  

   இதனையடுத்து, அந்த நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.