districts

img

விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை திருவெண்ணெய் நல்லூர் வட்ட மாநாடு கோரிக்கை

விழுப்புரம், செப்.25- விழுப்புரம் மாவட்டம், திரு வெண்ணைய் நல்லூர் வட்டத்தில் விடுப்பட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வெண்ணெய்நல்லூர் வட்ட 24-வது மாநாடு அரசூரில் நடை பெற்றது. பி.தங்கவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்குமரன் மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசினார். வட்டச் செயலாளர் கே.சிவக்குமார் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்ட  செயற்குழு உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன்  வாழ்த்திப் பேசினார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கீதா நிறைவுரையாற்றினார். 11 பேர் கொண்ட புதிய வட்டக்குழுவின் செயலாளராக கே.சிவக்குமார்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த மாநாட்டில், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்,100 நாள் வேலைத்திட்டத்தை முறை யாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.