districts

img

தகுதியானவர்களுக்கு 10 நாட்களில் பட்டா!

திருவள்ளூர், டிச.27- தாமரைப்பாக்கம் வருவாய் உட்கோட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் வசிக்கும் தகுதியானவர்களுக்கு அடுத்த 10 நாட்களில் பட்டா வழங்கப்படும் என திருவள்ளூர் வட்டாட்சியர் உறுதி யளித்துள்ளார். திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கம், அம்மணம்பாக்கம், கொமக்கம்பேடு, இந்திரா நகர், மாகரல், சேத்துப்பாக்கம், செப்பேடு, வெங்கல் ஆகிய ஊராட்சிகளில் கிராம நத்தம், தோப்பு பாட்டை ஓரம், மேய்க்கால், வெட்டு பள்ளம்,  காடு ஆகிய அரசு புறம்போக்கு  நிலங்களில்  கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஏராள மான குடும்பங்கள் வசித்து வரும் மக்க ளுக்கு குடிமனைப் பட்டா வழங்க வலி யுறுத்தியும் பெல்ட் ஏரியா தடையை நீக்க வேண்டியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தாமரைபாக்கம் கூட்டுச்சாலையில் வெள்ளியன்று (டிச.27) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன், துணை வட்டாட்சியர், ஆர்.ஐ, கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் 300க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றனர். மேலும், ஆய்வாளர்கள் கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்ய ஆர்ஐ- களுக்கு வட்டாட்சியர் உத்தர விட்டார்.  இதனை தொடர்ந்து, தலைவர்களிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கிராம நத்தத்தில் வாழும் தகுதியான குடும்பங்களுக்கு  அடுத்த 10 நாட்களில் இலவச குடிமனைப் பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.  இந்த போராட்டத்திற்கு ஊத்துக்  கோட்டை வட்டச் செயலாளர் எம்.பழனி தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் பி.துளசி நாராயணன், மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், மாவட்டத் துணைத் தலைவர் பி.ரவி, வட்டத் தலைவர் விஸ்வநாதன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.கண்ணன், வட்ட செயலாளர் என்.கங்காதரன், வட்ட குழு உறுப்பினர்கள் புஷ்பலதா, மணி வண்ணன், கிளை செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.