districts

img

களமருதூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருநாவலூர் மேற்கு ஒன்றிய மாநாடு கோரிக்கை

கள்ளக்குறிச்சி, அக்.6 – களமருதூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி: திருநாவலூர் மேற்கு ஒன்றிய மாநாடு வலியுறுத்தல் கள்ளக்குறிச்சி,அக்.6 – களமருதூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி  மற்றும் காவல் நிலையம் அமைத்து தர வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநாவலூர் மேற்கு ஒன்றிய மாநாடு வலியுறுத்தியுள்ளது. சிபிஎம்  திருநாவலூர் மேற்கு ஒன்றியம் 11வது ஒன்றிய மாநாட்டில் செங்கொடியை மூத்த தோழர் பரிக்கல் வி.குணசேகரன் ஏற்றி வைத்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் கே.ஆனந்தராஜ் வரவேற்றார்.  டி.ரகு  அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.அலமேலு, வி.ஏழுமலை, மாவட்டக் குழு உறுப்பினர் கே.அய்யனார் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.  மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் துவக்கி வைத்து பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் நிறைவுறையாற்றினார். மாவட்ட மாநாட்டிற்கு நிதியாக ஒரு லட்சம்  ரூபாயை மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் ஒன்றியக் குழு சார்பில்  ஒன்றியக்குழு தேர்வு  15 பேர் கொண்ட ஒன்றிய குழுவிற்கு செயலாளராக  கே.ஆனந்தராஜ் தேர்வு செய்யப்பட்டார். அயன் வேலூர், பரமநத்தம், திருநருங்குன்றம், தட்டாம் பாறை பகுதியில் நீண்ட காலமாக வசிக்கும் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக பட்டா வழங்க வேண்டும், ஒன்றிய முழுமைக்கும் 100 நாள் வேலையில் சட்ட கூலியை முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.