சிதம்பரம், மார்ச் 24- நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை மக்களவைக்கு போட்டி யிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிக்கும் பொதுக்கூட்டம் வரு கின்ற 6-ம் தேதி சிதம்பரம் அருகே லால்புரம் பகுதியில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிதம்பரம் தொகுதியில் போட்டி யிடும் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் தொல்.திருமாவளவனையும், மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்ய வுள்ளார். இந்நிலையில் முதல்வர் பிரச்சாரம் செய்ய உள்ள இடத்தினை ஞாயிற்றுக் கிழமை கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செய லாளரும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருகிற ஏப்.6 அன்று சிதம்பரத்தி லும் 5 ம் தேதி கடலூர் மற்றும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளுகிறார். கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியா சத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பா ளர்கள் வெற்றிபெறுவார்கள். தற்போது மக்களின் ஆதரவு திமுக கூட்டணிக்கு பல மடங்கு பெருகி இருக் கிறது. திமுக அரசின் மூன்றாண்டு சாதனை களும், பெண்களுக்கான திட்டங்களுமே அதற்கு காரணம். இந்த கூட்டணி சீட்டுக்காக ஆரம்பிக்கப் பட்ட கூட்டணி அல்ல. இது கொள்கை கூட்டணி. எதிர்க்கட்சியாக இருந்தபோதும், ஆளுங்கட்சியாக இருந்தபோதும் ஒன்றா கத்தான் இருக்கிறோம். இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதை மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். இது எங்களுக்கு கூடுதல் பலம். சுமார் ஒன்றரை லட்சம் வாக்கு வித்தி யாசத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி யில் திருமாவளவன் வெற்றி பெறுவார். முதல்வரின் உழைப்பு மற்றும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு பலம். பெண்களுடைய வாக்கு கள் அதிகமாக திமுக கூட்டணிக்கு வரும் என்றார். பொதுக்குழு உறுப்பினர்கள் பால முருகன், ஜேம்ஸ்விஜயராவன், கவுன்சிலர் அப்பு சந்திரசேகரன். குமராட்சி ஒன்றிய செய லாளர் சங்கர்,அண்ணாமலைநகர் பேரூராட்சி தலைவர் பழனி, சிதம்பரம் நகர துணை செயலாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனி ருந்தனர்.