districts

img

கண்ணப்பர் திடல் மக்களை புதிய குடியிருப்புக்கு குடியேற்றும் பணி தொடங்கியது

சென்னை, செப்.15 - கண்ணப்பர் திடல்  மக்கள் புதிய குடியிருப்பு களில் குடியேற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கண்ணப்பர் திடல் அருகே வீடற்றோர் காப்பக  கட்டிடத்தில் 22 ஆண்டு களாக நூற்றுக்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. அரசு ஒப்புக் கொண்டபடி வீடுகள் வழங் கப்படாததால் மார்க்சிஸ்ட் கட்சி தொடர் போராட்டத்தை மேற்கொண்டது. இதனை யடுத்து அரசு கணக்கெடுப்பு நடத்தி மூலக்கொத்தளம் ராமதாஸ் நகர் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம் பாட்டு வாரியத்தில் 114 குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்தது. ஆனால், ஒவ்வொரு குடும்பமும் 4.50 லட்சம் ரூபாய் பங்களிப்பு தொகை  தர வேண்டும் என்று மாந கராட்சி அறிவுறுத்தியது. இதற்கெதிராக மார்க்சிஸ்ட் கட்சி மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி யது. மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, 1.50 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் அல்லது  வங்கி கடன் தவணையில் குடியேற்ற அதிகாரிகள் முயற்சி எடுத்தனர். இந்த நடவடிக்கை களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. வங்கிக் கடன், முன்பணம் இல்லாமல் குடியிருப்பை வழங்க வேண்டும் என்று அமைச்சர், சட்டமன்ற உறுப் பினர், மாநகராட்சி ஆணை யர் மற்றும் வாரிய அதி காரிகளிடம் வலியுறுத்தி யதை அரசு ஏற்றுக்கொண் டது. மக்களை ராமதாஸ் நகர் குடியிருப்பில் குடி யேற்றும் பணி தொடங்கி உள்ளது. இதற்கான ஊர்க்கூட்டம் ஞாயிறன்று (செப்.15) நடை பெற்றது. இதில் பேசி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பரந்தாமன், முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர் பாபு ஆகியோர் தனி கவனம் செலுத்தி, மக்கள் பங்களிப்பு தொகையை முன்கூட்டியே செலுத்தாமல் குடியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். ஒரு வாரத்திற்குள் அனைத்து குடும்பங்களும புதிய குடியிருப்பில் குடி யேற்றப்படுவார்கள். கண்ணப்பர் திடலில் இருந்து பொருட்களை கொண்டு செல்ல மாநகராட்சியே வாகனங்களை ஏற்பாடு செய்யும். மேலும் மூன்று  நாட்களுக்கான உணவை யும் வழங்கும் என்றார். இந்நிகழ்வில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, பகுதிச் செயலாளர் கே.முரு கன், செயற்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம், பகுதி நிர்வாகிகள் ராஜாமணி, பி.கே.மூர்த்தி, புகழேந்தி, பார்த்திபன், எழுத்தாளர் கரண்கார்கி, வழக்கறிஞர் முருகன், செபாஸ்டின், மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.