சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
சென்னை, பிப். 13- புழல் திரு.வி.க. தெரு வைச் சேர்ந்தவர் சின்னசாமி (58). கட்டடத் தொழி லாளியான இவர், அந்த பகுதியில் வசிக்கும் பன்னீர்செல்வம் என்பவர் வளாகச் சுவரை இடிக்கும் பணியில் திங்கட்கிழமை ஈடுபட்டார். அப்போது வளாகச் சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து சின்ன சாமி மீது விழுந்தது. இதைக் கண்டு அதிர்ச் சியடைந்த சக தொழி லாளர்கள், சின்னசாமியை மீட்டு அருகே உள்ள பாடிய நல்லூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சின்னசாமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் புழல் காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
நவீன செல்பேசிக்கான முன்பதிவு
சென்னை, பிப்.13- உயர் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் ஐக்யூஓஓ நிறுவனம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த தனது புதிய நியோ 9 புரோ ஸ்மார்ட்போனுக்கான முன் பதிவை தொடங்கியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் போன் சிறப்பான செயல் திறன் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பைக் கொண் டுள்ளது. வாடிக்கையாளர் கள் நியோ9 புரோவை அமேசான். இன் மற்றும் ஐக்யூஓஓ இ-ஸ்டோரில் முன்பதிவு செய்து சில சலுகைகளைப் பெறலாம்: கூடுதல் சலுகையாக 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. 2 ஆண்டு உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இதே போல் அறிமுக நாளான பிப்ரவரி 22-ந்தேதி பல்வேறு பிரத்யேக சலுகைகளும் வழங்கப்பட உள்ளது என ஐக்யூஓஓ நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கி றது.
சைதை துரைசாமி மகன் மறைவு: டியுஜெ இரங்கல்
சென்னை, பிப்,13- சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும் மனித நேய அறக்கட்டளையின் நிறுவன தலைவருமான, சைதை சா.துரை சாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவு சொல்ல இயலாத பெரும் துயரத்தை அளித்துள்ளது என்று தமிழ்நாடு யூனியன் ஆப் ஜேர்னலிஸ்ட் (டியுஜெ) கூறியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தியில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட அன்புக்கு பாத்திரமானவர் துரைசாமி. எம்.ஜி. ஆர். வழியில், ஏழை, எளியவர்களுக்கு, பல்வேறு உதவிகளை இன்றளவும் தினசரி செய்து வருபவர். அவரது மகன் இமாச்சல பிரதேச மாநிலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலிருந்து, இன்று வரை அவர் உறுப்பினர்களின் வாழ்வாதாரத் துக்கு, குறிப்பாக பத்திரிகையாளர்கள் அவர் தம் குடும்பத்திற்கு செய்து வரும் உதவிகள் ஏராளம், பெரும் பாசம் கொண்ட அவரது ஒரே மகன் வெற்றியை இழந்து தவிக்கும் சைதை துரைசாமிக்கும் அவரது மனைவி, மருமகள், பேரக்குழந்தை கள், உறவினர்கள், அனைவருக்கும் டியுஜெ சார்பிலும் தன் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித் துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
வேலூரில் புத்தகத் திருவிழா
வேலூர்.பிப்,13 - வேலூரில் பிப்17 முதல் 27 வரை மாபெரும் புத்த கத் திருவிழா நடை பெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.ரா. சுப்புலெட்சுமி அறி வித்துள்ளார். வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத்துறை இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நாள்தோறும் காலை 11மணி முதல் இரவு 9மணி வரை நடைபெற உள்ளது. இந்த புத்தக திரு விழாவை அமைச்சர் துரை முருகன் பிப் 17 அன்று தொடங்கி வைக்கிறார். இப்புத்தக கண்காட்சியில் 70 பதிப்பகங்களின் சார்பில் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.