திருப்பத்தூர், மார்ச் 14 - தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஜவ்வாது மலைப்பகுதியில் அமைந்துள்ள புதூர் நாடு விளாங்குப்பம் கிராமத்திற்கு சாலை வசதி கேட்டு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டும் கூட மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லி பாபு தலைமையில் திருப்பத்தூரில் நடத்திய சாலை மறியல் போராட்டத்தின் விளைவாக திருப்பத்தூர் வட்டாட்சியர் முன்னி லையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை யில் 95.48 ஹெக்டேர் நிலம் வரு வாய்த்துறை துறையினரால் வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டது. அப்படி நிலம் ஒப்படைக்கப்படும் நடு குப்பத்திலிருந்து விளாங்குப்பம் வரை சுமார் 4 கிமீ தூரத்திற்கு வரை சாலை அமைக்கப்படாமல் இருந்து வந்தது. மேலும் வனத்துறையினரும் சாலை அமைப்பதற்கு அனுமதி மறுத்து வந்தனர். இதனால் மலைக்கிராமத்தில் இருந்து சுமார் 4கிமீ நடந்து நடுக்குப்பத்திற்கு வந்து பேருந்து பிடித்து திருப்பத்தூர் நக ரத்திற்கு பள்ளி கல்லூரி மற்றும் பல்வேறு வேலைகளுக்கு செல்லும் அவல நிலை தொடர்ந்து நீடித்து வந்தது. இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நட வடிக்கை எடுக்கப்படாததால் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டோர் அப்பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் வனத்துறை சார்பில் நிலம் வழங்குவதற்கான கடிதம் உடனடி யாக வருவாய் துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்பப் படும். அதன் பிறகு வேலையை துவக்கப் படும் என அதிகாரிகள் உறுதி மொழி அளித்த தையடுத்து அனைவரும் போராட்டத்தை விட்டு கலைந்து சென்றனர். இந்நிகழ்ச்சியில் மலைவாழ் மக்கள் சங்க கவுரவத் தலைவர் ஆர்.ஏ.லட்சுமணராஜா, மாநில துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம் மாவட்ட தலைவர் சந்திரன், செயலாளர் ஜெயராமன், பொருளாளர் லோகநாதன், சிபிஎம் தாலுகா செயலாளர் எம்.காசி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பெரு மாள், காமராஜ் மற்றும் கேசவன், செல்வம் (சிஐடியு) ஆகியோர் கலந்து கொண்டனர்.