சென்னை, ஆக.19 - ஜிஎம்டி தொழிலாளர்கள் நீதி கேட்டு திங்களன்று (ஆக.19) பள்ளிக்கரணையில் குடும்பத்துடன் ஊர்வலம் நடத்தினர். பள்ளிக்கரணையில் கிண்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட் (ஜிஎம்டி) நிறுவனம் லேத் எந்திரங்களுக்கான உதிரி பாகங்களை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனத்தில் 260 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இன்ஜினியரிங் எலக்ட்ரானிக்ஸ் அண்டு ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) உறுப்பினர்களாக உள்ளனர். தொழிலாளர்களுக்கான மூன்றா வது ஊதிய ஒப்பந்தம் 31.5.2023 தேதி யோடு முடிவுற்றது. அதன்பிறகு புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்தா மல் நிறுவனம் காலம் கடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொழி லாளர்கள் 22 நாட்கள் வேலைநிறுத்தம் செய்தனர். தொழிலாளர் துறை அறிவுரைப்படி போராட்டம் ஒத்தி வைத்தனர். நிர்வாகம் ஒப்புக்கொண்டபடி செயல்படாததால் மார்ச் 22 அன்று தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதனை யடுத்து ஜூன் 12அன்று 126 தொழி லாளர்களை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இந்த நிலையில் வேலை நிறுத்தத்தின் 151வது நாளில் தொழி லாளர்கள் குடும்பத்துடன் நீதி கேட்டு ஊர்வலம் நடத்தினர். நிறுவனம் முன்பு நடைபெற்ற கூட்டத்தில் சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பால கிருஷ்ணன், இன்ஜினியரிங் எலக்ட்ரா னிக்கஸ் அண்டு ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் எஸ்.அப்பனு, பொதுச்செயலாளர் ம.விஜயகுமார், சிபிஎம் சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் ப.ஜெயவேல் மற்றும் சகோதர சங்கத் தலைவர்கள் பேசினர்.