சென்னை கொரட்டூர் வடக்கு பகுதி முதல் குறுக்கு தெருவில் கடந்த 6 மாத காலமாக கழிவுநீர் சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இது தொர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேங்கியுள்ள கழிவு நீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.