districts

img

சூறைக்காற்றுடன் மழை: பழமையான மரம் சாய்ந்தது

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சுற்று வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (ஆக,10) சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அரசூர் செல்லும் அம்மாபேட்டையில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த புளியமரம் சாலையில் வேரோடு சாய்ந்தது. அப்போது அந்த சாலையில் வந்த சொகுசு கார் விபத்தில் சிக்கி சேதமடைந்தது. நல்வாய்ப்பாக காரில் பயணம் செய்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். மின் கம்பிகள் அறுந்து விழுந்து சேதமடைந்தது.