விழுப்புரம், அக்.2 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டமங்கலம் ஒன்றிய மாநாடு வட்டக் குழு உறுப்பினர்கள் ஜி.துரை, ஜி.கலியமூர்த்தி, கே.தனலட்சுமி ஆகியோர் தலைமையில் நடை பெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் பி.சௌந்தரராஜன் துவக்கி வைத்தார். ஒன்றியச் செயலாளர் கே.உலகநாதன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கீதா, சே.அறிவழகன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். கட்சியின் மாவட்டச் செயலாளர் என். சுப்பிர மணியன் மாநாட்டை நிறைவுசெய்து உரையாற்றினர். தீர்மாமானங்கள் நாட்டில் கண்டமங்கலம் ரயில்வே கேட்டை பணியை விரைவாக முடித்து போக்குவரத்துக்கு திறக்க வேண்டும். ரசபுத்திரபாளையம் ஏரியில் விவசாயத்திற்கு பயன்படுத்த கூடிய மண்ணை செங்கல் சூளைக்கு முறைகேடாக கடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.வள்ளலார் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு மேம்பாலம் அமைத்து கொடுக்க வேண்டும். வள்ளலார் பள்ளி எதிர்புறம் மாணவர்களின் மிதிவண்டி நிறுத்துவதற்கு இடம் தயார் செய்து கொடுக்க வேண்டும்.சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி விவசாயிகளின் நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும், நவமால் மருதூர் வடி ஆழியூர் தாண்டவமூர்த்தி குப்பம் செல்லும் சின்னபாபுசமுத்திரம் வடி வழுதாவூர் செல்லும் சாலையை தார் சாலையாக உடனடியாக அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 11 பேர் கொண்ட ஒன்றியக் குழுவின் செயலாளராக கே.உலகநாதன் தேர்வு செய்யப்பட்டார்.