districts

ஜவுளிக்கடை ஊழியரை வெட்டிய ரவுடிகள்  

சென்னை,மார்ச் 18- சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் தருண் குமார் (26). இவர் எம்.சி.ரோட்டில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.  இவரிடம் அதே பகுதி யைச் சேர்ந்த வெள்ளை நாக ராஜ் என்பவர் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக கடந்த மாதம் 19-ந்தேதி வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் தருண் குமாரிடம் வெள்ளை நாகராஜ் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வழக்கை திரும்ப பெறுவது சம்பந்தமாக நேரில் பேசிக் கொள்ளலாம் என்று அழைத்தார்.  இதையடுத்து அவர்  எண்ணூர் கடற்கரை சாலைக்கு செல்லும்போது வெள்ளை நாகராஜ் மற்றும் 2 ரவுடிகள் கத்தி யால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புதுவண்ணாரப் பேட்டை காவலர்கள் வழக்கு பதிவுசெய்து காசி மேட்டை சேர்ந்த ஜெகன் (22), வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சாய்ராம் (24) ஆகியோரை கைது செய்தனர்.

;