districts

img

புதுப்பிக்கப்பட்ட சென்னைப் பள்ளி மழலையர் பிரிவு கட்டிடம்: பார்வையிட்ட முதல்வர்

சென்னை, நவ.25- ரூ.69லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட சோழிங்கநல்லூர், எழில் நகரில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியின் மழலையர் பிரிவுக் கட்டிடத்தை திங்களன்று (நவ.25) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.  இதுகுறித்து அரசு சார்பில் வெளி யிடப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு: ஸ்ரீராம சரண் பொதுநல அறக்கட்டளை, சென்னை மாநக ராட்சிப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தரம் வாய்ந்த கல்வியை கொடுப்பதன் மூலம் சமூக மாற்றத்திற்கு உதவு வதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.  அதன் தொடர்ச்சியான முன்னேற்றத்தின் மூலம் 17 மாநக ராட்சிப் பள்ளிகள், சென்னை மற்றும் தஞ்சையில் 3 அரசுப் பள்ளிகள், 2 மழலையர் பள்ளி கள் என 22 பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 25,000 குழந்தைகள் பயன டைந்துள்ளனர். இந்த அறக்கட்டளை பெண்களுக்கு மாண்டிசோரி முறையில் கல்வி கற்பிப்பதற்கான பயிற்சியையும் நடத்தி வருகிறது.  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட எழில் நகரில் பயன்படுத்தாமல் பழுதடைந்த நிலையில் இருந்த நடுநிலைப்பள்ளி ஒன்றை மாநகராட்சி யின் அனுமதியுடன் அங்குள்ள பெரும்திரளான மக்களுக்கு உதவி செய்யும் வகையில், அப்பள்ளிக் கட்டடம்  பெருநகர சென்னை மாநக ராட்சியும், ஸ்ரீராமசரண் அறக்கட்டளை யும் இணைந்து “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ், ரூ.69 லட்சம் செல வில் ஐந்து வகுப்பறைகளுடன் மே 2024ல் சீரமைக்கப்பட்டது. மாண்டிசோரி வகுப்புகளுக்கான உபகரணங்களை பெருநகர சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது. மாநகராட்சியின் உரிய அனுமதியுடன் மழலையர் வகுப்பு பிரிவு புதிய வளாகத்தில் உருவாக்கப்பட்டு, சென்னை நடுநிலைப் பள்ளியின் இணைப்பாக எழில் நகரில் ஆகஸ்ட் 2024 முதல் செயல்படத் தொடங்கியது. இப்பள்ளியில் தற்போது 35 மழலையர் இலவசமாக பயின்று வருகின்றனர். மேலும், இப்பள்ளியில் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.  இந்த பள்ளி கட்டிடத்தை பார்வையிட்ட முதலமைச்சர் மழலையர் பிரிவு ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், ஆசிரி யர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.  அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பி னர்கள் எஸ். அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி. பிரபாகர ராஜா,  க.கணபதி, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு,  மாநகராட்சி ஆணை யர் ஜெ. குமரகுருபரன், ஸ்ரீராம சரண் பொதுநல அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் பத்மினி கோபாலன், தலைவர் கே. பாரதி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.