districts

img

பாஜக அரசை வீழ்த்த தமிழக மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர்

காரியாபட்டி, ஏப்.20- மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்தி டவே தமிழ்நாட்டு மக்கள் ஆர்வத்துடன் வாக்க ளித்துள்ளனர் என நிதி மற்றும் மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டத்திற் குட்பட்ட  மல்லாங்கிணறு ஊராட்சி ஒன்றிய தொ டக்கப்பள்ளியில்  நிதிய மைச்சர் தங்கம் தென்னரசு வாக்களித்தார். இதில் அவரது இளைய மகள் இமையா அமெ ரிக்காவில் படித்து வருகி றார். அவர் இம்முறை முதல் முறையாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.  வாக்களித்த பின் செய்தி யாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டு மக்கள் மிக தெளிவான ஒரு முடிவை வழங்க காத்தி ருக்கிறார்கள். தமிழக முதல் வரின் நல்லாட்சிக்கு நற் சான்றிதழ் வழங்கும் வித மாகவும், பாஜக அரசை ஒன்றியத்தில் இருந்து அகற்றி ஆட்சி மாற்றம் ஏற் படும் விதமாகவும் மக்கள்  ஆர்வத்துடன்  ஜனநாயக கடமையை ஆற்றியுள்ள னர். பாஜக ஆட்சியை  மாற்றுவது இன்று  அவசிய தேவை என  மக்கள் உணர்ந்துள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.