கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியத்தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும், ஆண்களுக்கு 60 வயது, பெண்களுக்கு 55 வயது நிறைவடைந்தது முதல் ஓய்வூதியம் தர வேண்டும். இதில் காலதாமதம் ஏற்பட்டால் நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் ஜூன் 19 அன்று மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளிக்கும் இயக்கம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக வெள்ளியன்று (ஜூன் 23) சென்னை மாவட்டங்கள் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் கு.குலாம் ஜீலானி பாபாவிடம், சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் லெனின் சுந்தர், கட்டுமான சங்க நிர்வாகிகள் ம.உதயகுமார் (மத்தியசென்னை), இ.மூர்த்தி, ஏ.நடராஜன் (தென்சென்னை), ஏ.நடராஜன், லூர்துசாமி (வடசென்னை) உள்ளிட்டோர் மனு அளித்தனர்.