districts

img

செப் 7 அன்று  சிபிஎம் நடத்தவுள்ள மறியல் போராட்டத்தை விளக்கி கட்சியின் வேலூர் தெற்கு வட்டக்குழு

செப் 7 அன்று  சிபிஎம் நடத்தவுள்ள மறியல் போராட்டத்தை விளக்கி கட்சியின் வேலூர் தெற்கு வட்டக்குழு சார்பில் வட்ட செயலாளர் எஸ்.செல்வி தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தை மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.பி.ராமச்சந்திரன் நிறைவு செய்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.ஏகலைவன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.எஸ்.மகாலிங்கம், பெ.திலீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரச்சாரம் பில்டர்பெட் சாலையில் துவங்கி சலவன்பேட்டை, சூளைமேடு, ஆணைக்குளத்தம்மன் கோயில், சங்கரன்பாளையம், விருபாட்சிபுரம் வரை நடைபெற்றது.