districts

மேம்பாலத் தூண் பூங்கா செடிகள் கருகின

சென்னை,ஜூலை 30- சென்னை மாநகரம் முழு வதும் 50 மேம்பால தூண்க ளில் உள்ள பசுமை செடிகளு டன் கூடிய செங்குத்து பூங்கா செடிகள் பராமரிக்கப் படாமல் உள்ளன. சென்னையின் முக்கிய பாலங்களின் தூண்களில் அழகு செடிகளை வளர்க்க திட்டமிடப்பட்டது. இது செங்குத்து பூங்கா என்று அழைக்கப்படுகிறது. திருமங்கலம் மேம்பாலம், அடையாறு எல்.பி.ரோடு மேம்பாலம் உள்ளிட்ட 50 மேம்பாலங்களில் உள்ள தூண்களில் அழகிய செங்குத்து பூங்கா செடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்கா அமைப்ப தற்காக மாநகராட்சி சார்பில் பல கோடி நிதி  செலவிடப்பட்டது. மேம்பால  சாலைகளில் சென்றுவரும் பொதுமக்கள் வாகன ஓட்டிகளை இந்த செங்குத்து  பூங்கா செடிகள் கவர்ந்தது. இந்த நிலையில் கண்ணுக்கு  பச்சை பசேலென காட்சி யளித்த இந்த செங்குத்து பூங்கா செடிகளை மாநக ராட்சி ஊழியர்கள், மற்றும்  தனியார் ஒப்பந்த ஊழியர் கள் சரிவர பராமரிப்பு செய்யாததால் தண்ணீ ரின்றி தற்போது வெயிலில்  காய்ந்து கருகி வருகின்றது.  சென்னை மாநகர சாலைக ளில் உள்ள மேம்பால தூண்க ளில் சுவரொட்டிகள் மற்றும்  விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அலங்கோல மாக உள்ளதை தடுக்கும் வகையில் மேம்பால தூண்க ளில் பசுமை பூங்கா செடிகள்  அமைக்கப்பட்டது. தற்போது மாநகராட்சி ஊழியர்கள் சரிவர பரா மரிக்காததால் வெயிலில் செடிகள் காய்ந்து, கருகி வருகின்றன.  இதனால் அந்த பூங்காக்கள் களையிழந்து காணப்படுகிறது. விரைந்து செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.