districts

img

குப்பைகளால் அலங்கோலமாக காட்சியளிக்கும் தேசிய நெடுஞ்சாலை

விழுப்புரம், பிப்.9- விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள்  குப்பை குவிந்து அலங்கோலமாக காட்சியளிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 688 ஊராட்சி கள் உள்ளன. அந்தந்த ஊராட்சிகளில் குப்பைகளை சுத்தம் செய்து, அப்புறப்படுத்த தூய்மை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தமிழக அரசு, கடந்து சில ஆண்டுகளாக ‘என் குப்பை என் பொறுப்பு‘ என்ற வாசகத்தோடு கொரோனாவுக்கு பின்னர் குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தப்படுத்தும் வகையில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தற்போது செயல்படுகிறதா ? அல்லது இல்லையா ? என்று கூறும் அளவிற்கு இத்திட்டம் பேச்சளவில் செயல்படுவது போல மாறிவிட்டது.  அரசு அறிவித்தவுடன், சில நாட்கள் அந்தந்த மாவட்டத்தில் என் குப்பை என் பொறுப்பு என்று கூறி கொண்டு களத்தில் இறங்கிய மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அதன் பின்னர் சோத்து உலை கொதி அடங்கியது போல் மாறி கிடக்கிறது. ஆனால், தற்போது செயல்பாட்டில் இருக்கிறதா ? இல்லையா ? என்று சந்தேகம் எழும் வகையில் ஆங்காங்கே குப்பைகள் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில சாலைகள், கிராமப்புற சாலைகள் ஆகிய வற்றின் ஓரங்களில் அந்தந்த பகுதியில் உள்ள கிராம ஊராட்சிகளில் சேரும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. மேலும் அப்பகுதியில் வியாபாரம் செய்யும் காய்கறிகள்,பூண்டு, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட மீதமுள்ள கழிவு களை வியாபாரிகள் சாலை ஓரங்களில் கொட்டி வருகின்றனர், திருமண மண்ட பங்கள் ஒரு படி மேலே போய் பல நாட்கள் மீதமுள்ள குப்பைகளை எங்கெல்லாம் அரசு புறம்போக்கு இடங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் கொட்டி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலைகள் மாநில சாலைகள், கிராம சாலைகள் ஆகிய வற்றை பராமரிக்கும் சம்பந்தப்பட்ட துறை, அதில் பணி செய்யும் ஊழியர்கள் சாலை களை பராமரிப்பதும் இல்லை கண்டு கொள்வதுமில்லை என்ற இந்த நிலை தான் நீடித்து வருகிறது.  இந்த நிலையில் தான் அந்தந்த பகுதியில் சேரும் குப்பைகளை தற்போது அப்பகுதியில் உள்ள சாலை ஓரங்களில் கொட்டி வருகின்றனர். சில நேரங்களில் குப்பைகளை கொளுத்தி விடுவதாலும் புகை மூட்டம் வாகன ஓட்டிகளை பயமுறுத்தி வரு கிறது, ஆனால் சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாய நிலை உருவாகி வரு கிறது. மேலும் குப்பைகள் வெகு நாட்களாக அங்கே கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, மர்ம நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது, உடனடியாக அரசு கருத்தில் கொண்டு மீண்டும் என் குப்பை என் பொறுப்பு என்ற திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் மேலும் கடந்த காலங்களில் ஒவ்வொரு ஊராட்சி களிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என ஒதுக்கி அதிலிருந்து உரம் தயாரிப்பு நடைபெற்று வந்தது. தற்போதைய நிலையில் அவை அனைத்தும் செயல்படுகிறதா என்று பொதுமக்களிடையே கேள்விகள் எழுந்து வருகிறது,இதனால் உடனடியாக சாலை ஓரங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து மீண்டும் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் சேகரிக்கும் குப்பை களை சரியான இடம் தேர்வு செய்து அந்த இடங்களில் குப்பைகளை கொட்டி சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.