தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து ஜோதி அம்மாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்கு சேகரித்தனர். இந்த இயக்கத்தை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சித்ரகலா, டி.சுந்தர், சைதை பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.