செங்கல்பட்டு, ஜூலை 23- பத்து அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நகராட்சி தூய்மைப்பணி மற்றும் இதர பிரிவு பணிகளை அவுட்சோர்சிங் தனியார்மய அரசாணை 10, 139, 152 உத்தரவை தமிழக அரசு நகராட்சி நிர்வாகமும் ரத்து செய்து திரும்ப பெற வேண்டும், 1997 க்குப்பின் 2003 க்கு முன்பு பணிவரன்முறைப்படுத்தப்பட்ட முறையான ஊதிய விகிதத்தில் பணியமர்த்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிரந்தர தொழிலாளர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழையபென்சன் திட்டத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. செம்மையானத்தின் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு மாநில குழு உறுப்பினர் கலைச்செல்வி மாவட்ட நிர்வாகிகள் திருமலை தேவி உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாவட்ட செயலாளர் கா. பகத்சிங் தாஸ் பேசினார்.