districts

சென்னை முக்கிய செய்திகள்

திருவொற்றியூர் குடிநீரில் கழிவை கலந்த கொடூரம் சிசிடிவி கேமராவில் பதிவானது 

சென்னை, ஜன.27- திருவொற்றியூரில் முன்விரோதம் காரணமாக அண்டை வீட்டுக்காரர், குடிநீரில் இரண்டு ஆண்டுகளாக மலம்  மற்றும் சிறுநீர் கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. திருவொற்றியூர் கடற்கரை சாலை கல்யாண செட்டி நகரை சேர்ந்தவர்கள் மோகன், சங்கீதா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் குத்துச் சண்டை பயிற்சி பெற்று வருகின்றனர். இதனிடையே கடந்த ஆறு மாத காலமாகவே இவர்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு நோய்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டில் சமைத்த சத்தான உணவுகளை உட்கொண்ட போதும், அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் நிலை அடிக்கடி வந்துள்ளது. மகள்களுக்கு அடிக்கடி வயிறு சம்பந்தமான பிரச்னைகளும் ஏற்படுவதால் குழப்பத்தில் இருந்த சங்கீதா வீட்டில் கண்காணிப்பு கேமராவை பொருத்தியுள்ளார். கடந்த  ஐந்து நாட்களுக்கு முன்பு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில், பக்கத்து வீட்டை சேர்ந்த எல்லப்பன் என்ற நபர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் இவரது வீட்டுக்குள் புகுந்து ஒரு பக்கெட்டில் மலத்தையும், சிறுநீரையும் கலந்து குடிநீர் தொட்டியில் ஊற்றுவது தெரியவந்தது. மாநகராட்சி குடிநீரை பயன்படுத்தும் சங்கீதா இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வரும் குடிநீரை டிரம்களில் பிடித்து வைத்திருந்த நிலையில், அந்த குடிநீரில் மலத்தை யும் சிறுநீரையும் கலப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக  வெண்மை நிறமாக  பிடித்து வைக்கும் தண்ணீர் மஞ்சள் நிறமாகவும் மாறி  துர்நாற்றம் வீசியதாகவும் அவர் கூறியுள்ளனர். இது குறித்து சிசிடிவி ஆதாரங்களுடன் சங்கீதா திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர்களின் புகாரை வாங்க மறுத்த காவல்துறையினர், ஆதாரங்களை பார்த்த பின்பு எல்லப்பனை அழைத்து விசாரணை நடத்தினர்.  பின்னர் அவரிடம் எழுதி வாங்கி விட்டு காவல் நிலைய ஜாமினில் வெளியே விட்டு விட்டனர். இந்நிலையில், எல்லப்பனின் மைத்துனர் குமார் பெரிய ரவுடி என்றும் கொடுத்த புகாரை திரும்ப பெறாவிட்டால் கொலை செய்து  விடுவதாகவும் சங்கீதாவை எல்லப்பன் மிரட்டியுள்ளார். தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் எல்லப்பன் மீது நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சங்கீதாவின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆட்டோ சங்க  மதுரவாயல் பகுதி மாநாடு

சென்னை, ஜன.27 - ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கத்தின் மதுரவாயல் மேற்கு  பகுதி மாநாடு வெள்ளியன்று (ஜன.26) காரம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில  தலைவர் வி.குமார், தென்சென்னை மாவட்ட பொதுச் செயலாளர் இ.உமாபதி, பொருளாளர் ஏ.பக்கிரி, துணைத் தலைவர் சி.முருகன், பகுதி தலைவர் பி.நாகேந்திரன், செயலாளர் கே.சுப்பிரமணி, முறைசாரா தொழிலாளர் சங்க  மாவட்ட துணை செயலாளர் வி.தாமஸ், மாதர் சங்க மாவட்ட  தலைவர் எஸ்.சரவணசெல்வி உள்ளிட்டோர் பேசினர். மேற்கு பகுதியை வடக்கு, மேற்கு என இரண்டு பகுதி களாக பிரிக்கப்பட்டது. வடக்கு பகுதிக்கு தலைவராக ஜி.ராம்போஸ், செயலாளராக கே.சுப்பிரமணி, பொருளா ளராக பெருமாள் ஆகியோரும், மேற்கு பகுதிக்கு தலைவ ராக எம்.எஸ்.ராஜேந்திரன், செயலாளராக பி.நாகேந்திரன், பொருளாளராக எம்.ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர்.

 திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

சென்னை,ஜன.27-  திருவல்லிக்கேணி பகுதியில் சாலையில் கொண்டிருந்த  கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் நெருப்பு பரவியதும், உள்ளே இருந்தவர்கள் உடனடி யாக கீழே இறங்கியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப் பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  தீயணைப்பு துறையினர் நெருப்பை அணைத்தனர். இதில் கார் முழுவதுமாக எரிந்து சேதமானது.

காலமானார்

ராணிப்பேட்டை,ஜன.27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட வேலூர் மாவட்ட மூத்த தோழர்களில் ஒருவரான எஸ்.சி. ஆரியப்பன் வெள்ளிக்கிழமை ( ஜன.26)  காலமானார்.   பீடித் தொழிலாளர் சங்கம், விவசாயிகள் சங்கங்களில் செயல்பட்டு வந்த அவர்  அலமேலுமங்காபுரத்தில் கட்சியின்  கிளைச் செயலாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.   அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுகா மேல் நேத்தப்பாக்கம் கிராமத்தில் செயலாளர் எஸ். கிட்டு தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.பி. ராமச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், ரகுபதி, சந்திரன், மணி, செல்வம், மு.சேகர், மலைவாழ் மக்கள் சங்க மாநில பொது செயலாளர் இரா.சரவணன், ஆற்காடு வட்டக்குழு உறுப்பினர்கள் கன்னியப்பன், வெங்கடேசன், விஜயன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.