செங்கல்பட்டு, ஜூன் 27-
திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் வசித்துவரும் இருளர் இன மக்களுக்கு குடிமனை பட்டா மற்றும் இலவச வீடு கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் செவ்வா யன்று (ஜூன் 27) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் பன்னீர் தலைமை தாங்கினார். இதில், வாயலூர் ஊராட்சி காரைத்திட்டு பகுதியில் வசிக்கும் இருளர் மக்களுக்கு தனிப்பட்டா வழங்க வேண்டும், மணமை, நல்லூர், நாவலூர், விட்டிலாபுரம், களத்தூர், கொள்ளமேடு, சூரடிமங்கலம், கொத்திமங்கலம், பில்லேரி மேடு, கீரப்பாக்கம், மாமல்லபுரம், அன்னை சத்யா நகர் உள்ளிட்ட கிராமங்களில் வசித்தும் வரும் இருளர் பழங்குடியின மக்களுக்கு, வீட்டுமனை பட்டா மற்றும் தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் துளசி நாரா யணன், மாவட்ட தலைவர் அரிகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் வாசுதேவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி செயலாளர் குமார், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் அழகேசன் ஆகியோர் பேசினர்.