districts

img

அடிக்கல் நாட்டு விழா

சிதம்பரம் நகரம் 4ஆவது வார்டில் உள்ள பெரிய அண்ணா குளம் ரூ 1 கோடியே 49 லட்சம் செலவில் குளத்தை தூர்வாரி கரையை பலப்படுத்தி சுற்றுச்சுவர், நடைபாதை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா திங்களன்று (ஜூன் 27) நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டினார். இதில் நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், நகராட்சி ஆணையர் அஜீதா பர்வீனா, பொறியாளர் மகாராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.