கள்ளக்குறிச்சி, டிச.16 - உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால் மயானத்திற்கு இறந்தவரின் சடலத்தை தண்ணீரில் எடுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. செங்குறிச்சி ரயில்வே சுரங்க பாதை யில் மழைநீர் தேங்கி நிற்பதால் இந்த பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தி வந்த ரயில்வே சுரங்க பாதை தற்போது பெய்த கனமழையில் தண்ணீர் உள்ளதால் கிராம மக்கள் வெளியில் செல்வதற்கு வேறு வழியில்லாமல் அவதிக்குள்ளாகும் நிலைமை நீடித்து வருகிறது, செங்குறிச்சி தலித் பகுதியில் ஞாயி றன்று சடலத்தை கொண்டு செல்வதற்கு மாற்று பாதை இல்லாததால் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை தூக்கிச் சென்றனர் இந்த வழியாகத்தான் விவசாய கூலி தொழிலாளர்கள் தங்கள் விவ சாய நிலங்களுக்கு செல்லக்கூடிய பாதை யாகவும் இருப்பதால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக இருக்கின்றனர். இப்பகுதி மக்கள்,இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் தேங்கி நிற்கும் நீரை அகற்றா மல் இருப்பதால் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே உடனடியாக தேங்கி நிற்கும் நீரை அகற்றி தர வேண்டும், இதேபோன்று திருநாவலூர் ஒன்றியத்திற்குட்பட்ட பூ.மாம்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை,மாரனோடை கிராமம்,வண்டிப்பாளையம் ரயில்வே சுரங்கப்பாதை ஆகியவற்றில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் வருவதற்கு பல கிலோமீட்டர் தூரம் சுற்றிவருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சிபிஎம் திருநாவலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ.ஜெயகுமார் சம்பந்தப்பட்ட ரயில்வே துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் அதிகாரிகள் உடனடியாக இப்பாலங்களில் உள்ள தண்ணீரை அகற்றி தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.