கள்ளக்குறிச்சி, ஜூன் 15-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கல்வராயன்மலை கால்பாச்சேரி, மேல்பாச் சேரி, கேடார், சின்ன திருப்பதி, மடவாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கரடிகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன.
இந்த பகுதியில் சாலை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் காட்டு பகுதி வழியாக ஒரு வழிபாதையில் சின்னசேலம் பகுதிக்கு வந்து தங்களது வீட்டுக்கு தேவை யான பொருட்களை வாங்கி மீண்டும் தங்களது பகுதிக்கு காட்டு பகுதி வழியாக வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் சமீப காலமாக காட்டு பகுதி வழியாக வரும் பொது மக்கள் வனவிலங்குகளால் தாக்கி படு காயம் அல்லது உயிர் இழப்பு ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.
சம்பவத்தன்று மேல்பா ச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கிணத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (40) விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் இருந்து சின்னசேலம் அருகே ஊனத்தூர் பகுதிக்கு சென்றார். அப்போது ஊனத்தூர் வனப்பகு தியில் இருந்து திடீரென வெளிய வந்த ஒற்றைக் கரடி இவர் நடந்து சென்ற பாதையின் குறுக்கே