கடலூர்,மார்ச்.2- தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்க ளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சிஐடியு, டிவிஎஸ் சங்கத்தினர் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 23 மாத காலமாக தொழிலாளருடைய பல்வேறு கோரிக்கைகளை பேசி தீர்க்கா மல் காலம் கடத்தும் டாக்ரோஸ் நிர்வா கத்தை கண்டித்தும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நியாயமான ஊதிய உயர்வு வழங்க கோரியும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் பழைய நடை முறையை அமல்படுத்தக் கோரியும், தொழி லாளர்களின் கோரிக்கையில் மாவட்ட நிர்வாகமும் தொழிலாளர் துறையும் தலையிட வலியுறுத்தி கடலூர் முதுநகர் மணி கூண்டு அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. டாக்ரோஸ் எம்ளாயீஸ் யூனியன் சிஐடியு, டாக்ரோஸ் தொழிலாளர் வாழ்வு ரிமை சங்கம் டிவிஎஸ் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு சிஐடியு தலைவர் ஆர்.கோவிந்தன், டிவிஎஸ் தலை வர் கே. சக்திவேல் ஆகியோர் தலைமை தாங்கினார். இந்த உண்ணாவிரதத்தில் சிஐடியு நிர்வாகிகள் ஆர்.பரிமளம், ஜே. ஆனந்த பாஸ்கர், கே.சரவணகுமார், பொன்னி துறை, ஏ.சிலம்பரசன், டிவிஎஸ் சங்கத்தின் நிர்வாகிகள் டி. வேல்முருகன், எஸ். ராஜேஷ், ஆர்.பாக்கியராஜ், எஸ்.பி.வெற்றி வேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட துணை தலைவர் ஆர்.ஆளவந்தார் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சி ஐ டி யு மாவட்ட செயலாளர் டி.பழனிவேல் நிறைவு செய்து சிறப்புரை ஆற்றினார். வாழ்வுரிமை சங்கத்தின் செயலாளர் எஸ்.அருள் செல்வன், சிஐடியு மாவட்ட இணை செயலாளர்கள் வி. கிருஷ்ண மூர்த்தி, கே. ஸ்டாலின், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.குமார், எம்.சிவானந்தம், ஏ.பார்த்தசாரதி ஆகியோர் பேசினார்கள். சிஐடியு செயலாளர் எம். தேவநாதன் நன்றி கூறினார்.