districts

img

சிலிண்டர் வெடித்து பெண் பலி

திருநின்றவூர்,டிச.20- ஆவடி கோவில்பதாகை சேர்ந்தவர் ரோஜா (வயது 52) என்பவர் திங்களன்று எரிவாயு அடுப்பை பற்ற வைத்த போது வெடித்து சிதறியதில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில்  ரோஜாவின் மகன் சங்கர் ராஜா மற்றும் அவரது மகள் கீர்த்திகா, மகன் கவுதம் ஆகிய 4 பேரும் உடல் கருகினர். இதில் விட்டில் இருந்த பொருட்கள் தீக்கிரையாகின. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எரிவாயு சிலிண்டரில் இருந்த ரெகுலேட்டர் பழுதானதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக வாங்கி பொருத்தினர். ஆனால் அது சரியாக பொருந்தாமல் தொடர்ந்து எரிவாயு கசிந்ததால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.