districts

img

சமூகநீதி பேசிய பாமக, பாஜக உடன் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து அம்பலப்பட்டு நிற்கிறது : உ.வாசுகி சாடல்

திருவள்ளூர், ஏப் 17- சமூக நீதிதான் எங்களுடைய கொள்கை, அடித்தளம் என்றெல்லாம் பேசிய  பாமக, அந்த கொள்கைகளுக்கெல்லாம் நேர் விரோதமாக பயணிக் கும், பாஜக உடன் சந்தர்ப்ப வாத கூட்டணி அமைத்து மக்கள் மத்தியில் அம்பலப் பட்டு நிற்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி சாடியுள்ளார். அரக்கோணம் மக்கள வைத் தொகுதியில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகனை ஆதரித்து சிபிஎம் சார்பில் ஆர்.கே.பேட்டையில் செவ்வாயன்று (ஏப் 16),   பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் உ.வாசுகி பேசு கையில், 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் உழைக் கும் மக்கள் புதைகுழிக்குள் தள்ளப்பட்டனர். இந்த மக்களவைத் தேர்தலை பயன்படுத்தி புதைக் குழியில் இருந்து எப்படி வெளியே வர முயற்சிக்க வேண்டுமே தவிர,  மீண்டும் ஆழமாக சகதிக்குள் சிக்கி விட கூடாது. கடந்த தேர்தலில் மோடி கொடுத்த ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. மாறாக பணக்காரர்களும், பெருமுதலாளிகளும் ஏற்றம் பெற்றனரே தவிர  நம்மை போன்ற உழைப் பாளிகளின் நிலை எள்ளள வும் மாறவில்லை. இந்தியா கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி  அல்ல. அது மக்கள் கூட்டணி. ஜனநாயகத்தையும்,  மதச்சார்பின்மையும்  இறையாண்மையையும் பாதுகாக்க குரல் கொடுத்த கூட்டணி, ஒன்றிய பாஜக ஆட்சி  தோற்கடிக்கப்பட்டு,  மதச்சார்பற்ற இந்தியா கூட்டணி அரசு வெற்றி பெற்றால் தான் உழைப்பாளி  மக்களுக்கான ஆட்சியாக  அமையும். பாமக தலை வர்கள் ராமதாஸ்,  அன்பு மணி ராமதாஸ்   ஆகியோர்  எந்தக் கூட்டணியில் இருந் தாலும் ஒருபோதும் எங்கள்  கொள்கைகளை விட்டுக்  கொடுக்க மாட்டோம் என் கிறார்கள். அப்படியென் றால் சமூக நீதி பேசும் பாமக பாஜக-வோடு எப்படி  கூட்டணி வைத்துக் கொள்ள  முடியும்.  கடந்த 10 ஆண்டுகளில் மாநில உரிமைகளை பாது காப்பதற்கு அல்லது மாநிலங்களுக்கு அதிக உரிமை கொடுப்பது குறித்து  ஏதாவது ஒரு நடவடிக்கை யாவது மோடி அரசாங்கம் எடுத்திருக்கிறதா,  மாநில உரிமைகளை மிதிக்கிற, நசுக்குகிற கட்சியோடு எப்படி கூட்டணி வைத்துக் கொள்ள முடியும்.  இட  ஒதுக்கீடு என்ற கோரிக் கையை வைத்தால் மட்டும்  போதுமா. 20 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி யிருக்க வேண்டிய ஒன்றிய  பாஜக அரசு அதை செய்ததா. இதுகுறித்து பாமக கேள்வி எழுப்பிய துண்டா. மோடி ஆட்சியோடு சேர்த்து சந்தர்ப்பவாத அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை அடியோடு அகற்ற உறுதியுடன் இந்த  தேர்தலில் மக்கள் வாக் களிக்க வேண்டும் என்றார். இந்த பொதுக்கூட்டத் தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  சி.பெருமாள் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் ஏ.சிவ பிரசாத் வரவேற்றார். திமுக  மேற்கு மாவட்ட செயலாளர்  எஸ்.சந்திரன், எம்எல்ஏ, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பூபதி, சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.ராஜேந்திரன், ஜி.சம்பத்,  ஆர்.தமிழ்அரசு, இ.மோகனா, திருத்தணி வட்டச் செயலாளர் வி.அந் தோணி, மாவட்ட குழு  உறுப்பினர் ஏ.அப்சல் அகமது, மதிமுக மாவட்ட செயலாளர் மு.பாபு, விசிக  தொகுதி துணை செயலா ளர் குமார், காங்கிரஸ் நெசவாளர் பிரிவு மாநில தலைவர் சுந்தரவேல், மனித நேய மக்கள் கட்சியின்  மாவட்ட நிர்வாகி நூர் முகம்மது, திக மாவட்ட தலைவர் மணி உட்பட பலர்  பேசினர். முன்னதாக தணிக்கை கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. நிறைவாக ஆர்.கே. பேட்டை கிளை செயலாளர் எஸ்.யு.ஏழுமலை நன்றி கூறினார்.