districts

img

மேலும் இரவு நேரங்களில் வெளியாட்கள் ஆட்டோக்களில் வந்து மது அருந்தும் மதுக்கூடமாகவும் மாறி வருகிறது

மேலும் இரவு நேரங்களில் வெளியாட்கள் ஆட்டோக்களில் வந்து மது அருந்தும் மதுக்கூடமாகவும் மாறி வருகிறது. இதை தட்டிக் கேட்கும் எலக்ட்ரிக்கல் ரயில்வே ஊழியர்களை அவர்கள்  தகாத வார்த்தைகளால் திட்டுவதும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறப்படு கிறது. மேலும் உயர் அதிகாரிகள் சோதனை செய்ய வரும்  போது, அங்கிருக்கும் மது பாட்டில்களை அப்புறப் படுத்துமாறு ரயில்வேஊழியர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். பார்சல் அலுவலகத்தில் ஒரே ஒரு ரயில்வே காவலர்கள்  பணியில் இருப்பதால், இந்த குற்றங்களை அவரால் கட்டுப்படுத்த முடிவதில்லை, எனவே கூடுதல் ரயில்வே காவலர்களை நியமித்து, அந்த பகுதியில் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும், ரயில்வே ஊழியர்கள் பணிபுரிய ஏதுவான பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என டிஆர்இயூ கோரிக்கை விடுத்துள்ளது.