விழுப்புரம், மார்ச் 7- விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், செவலபுரை கிராமத்தில் நீதி மன்ற தீர்ப்பின் படி வீடுகள் இடிக்கப்பட்டதால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. மாற்று இடம் கிடைக்க நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர், தொடர் போராட்டத் தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆகி யோருக்கு புதனன்று (மார்ச்7) பொதுமக்கள் நேரில் நன்றி தெரிவித்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள செவலப்புரை ஊராட்சி யில் 80 ஆண்டுகளுக்கு மேலாக அரசு புறம்போக்கில் வசித்து வந்த ஏழை மக்களின் வீடுகளை நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 2022 ஆண்டு பிப்ரவரி மாதம் அரசு நிர்வாகம் இடித்து அப்புறப்படுத்த முயன்றது. இந்நிலையில் மார்க்சிய கம்யூ னிஸ்ட் கட்சி பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு ஆதரவாக ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக போராட் டங்களை நடத்தியது, அதன் விளைவாக பாதிக்கப்பட்ட வர்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச வீட்டுமனைப்பட்டாகளை மாற்று இடத்திற்கு வழங்கியது. இதில் பயன்பெற்ற மக்கள் சிபிஎம் மாவட்டச்செயலாளர் என்.சுப்பிரமணி தலைமையில் மாவட்ட ஆட்சியர் பழனியை சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன், மேல் மலையனூர் இடை கமிட்டி செய லாளர் டி.முருகன், ஒன்றிய குழு உறுப்பினர் ரவி, கிளைச் செய லாளர் துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் செவலப்புரை ஊராட்சியில் வீட்டுமனை பெற்ற வர்களுக்கு வரும் ஜூன் மாதம் இலவச வீடுகள் வழங்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அம்மக்கள் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராம மூர்த்தியை சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர், அப்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், ஆர்.டி.முருகன், ஒன்றிய செயலாளர் பி.சிவராமன்,மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ.நாகராஜன், கே.வீரமணி, விதொச எஸ்.அபிமண்ணன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஹரி கிருஷ்ணன் உட்பட பலர் உடனி ருந்தனர்.