districts

img

அரசாணைப்படி வாடகை வசூலிக்க வேண்டும்: கோவில் அடிமனைப் பயனாளிகள் கோரிக்கை

சென்னை, அக்.9 - அறநிலையத்துறை கோவில் நிலங்களில் குடியிருப்போரிடம் அரசாணைப்படி வாடகை வசூலிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை போரூர் பகுதியில் அறநிலை யத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த காலங்களில் பல மடங்கு வாடகை தொகை உயர்த்தப்பட்டது.  இதற்கு எதிராக நடைபெற்ற போராட்டங் களையடுத்து புதிய அரசாணை (298/2010) வெளியிடப்பட்டது. அதனை அமல்படுத்த வலியுறுத்தி புதனன்று (அக்.9) போரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அடிமனைப் பயனாளிகள், குத்தகை  விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தின் போரூர் கிளை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கொரோனா தொற்று காலம் முழுவதும் வாடகையை ரத்த செய்ய வேண்டும், அரசாணை 318ஐ  செயல்படுத்த சட்டப்படி மறுசீராய்வு செய்ய  வேண்டும், பல தலைமுறைகளாக வசிப்போரை ஆக்கிரமிப்பாளர் என வகைப் படுத்தி வெளியேற்றக் கூடாது, கோவில் நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு வாடகை  நிர்ணயம் செய்ய வேண்டும், பல தலை முறைகளாக குடியிருப்போருக்கு சட்டப்படி  இந்த இடங்களை சொந்தமாக்க வேண்டும்.  அறநிலையத்துறை பற்றி அவதூறு செய்யும்  மதவெறி அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்போருக்கு பெயர் மாற்றம், மின் இணைப்பு வழங்க மறுக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.வெள்ளைச்சாமி தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் வ.செல்வம், மாவட்டச் செயலாளர் எம்.நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், சங்கத்தின் கிளை நிர்வாகிகள் ஆர்.குபேந்திரன், சி.ரவிகிருஷ்ணா உள்ளிட்டோர் பேசினர்.