சென்னை,ஆக.2-
எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரயில் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை மட்டுமே தாம்பரத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப் பட்டது. இதைதொடர்ந்து, தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நிரந்தரமாக நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை மட்டுமே தாம்பரத்தில் நின்று செல்லும் என ஏற்கெனவே அறிவிக்கப் பட்ட நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது தொடர்ந்து நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.