மதுராந்தகம், ஜூன் 5-
தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (23). சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் அச்சரப்பாக்கம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதினார். இந்த விபத்தில் சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் பேருந்து சக்கரத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் நசுங்கியதில் தீப்பிடித்தது. அவ்வழியே சென்றவர்கள் பேருந்தின் முன்பகுதியில் ஏற்பட்ட தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.