சென்னை, ஜூன் 17-
ஆவடி அருகே பட்டா பிராம் கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் கமலேஷ், 21. இவர் பூந்தமல்லியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வெள்ளியன்று (ஜூன் 16) காலை கமலேஷ் வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் பட்டாபிராம் ரயில்வே மேம்பாலம் வழி யாக வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வளைவில் அதிவேகமாக வந்த போது, திடீரென்று நிலை தடுமாறி ரயில்வே மேம்பாலத் தின் தடுப்பு சுவர் மீது மோதி நிலை தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்துள் ளார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு போரூர் ராமச்சந்திரா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் கமலேஷ் வழியிலே உயிரி ழந்து விட்டதாக தெரிவித்த னர். இச்சம்பவம் குறித்து பட்டாபிராம் போக்குவரத்து காவலர்கள் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.