பள்ளி வளாகத்தில் ஆசிரியர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றக் கோரி தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ. ஸ்ரீதர் தலைமையில் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் டிட்டோஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர் சி. சேகர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் செ. சரவணன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.