districts

img

சாம்சங் தொழிலாளர்கள் ஆதரவாக ஆசிரியர்கள்

சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் பணி பாதுகாப்பை உறுதி செய்ய கோரியும், தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்டத் தலைவர் கே.ஆர். பிரபாகரன் தலைமையில் புதனன்று (அக்.9) ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பி. குணசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர். ரகு, எம். குமரன், மாவட்ட செயலாளர் செ. சரவணன், மாநிலத் துணைத் தலைவர் (வடக்கு மண்டலம்) பி.ஜெ. அமர்நாத், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட தலைவர் மு. சதீஷ்குமார், மாவட்ட செயலாளர் கோ. அரிபாபு, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட தலைவர் பி. ஆதவன், மாவட்ட செயலாளர் எஸ். வெங்கட்ராஜ் உள்ளிட்டோர் பலர்  உரையாற்றினர்.