டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ராணிப்பேட்டை மாவட்ட பேரவை கூட்டம் செவ்வாயன்று (அக். 15) மாநிலத் தலைவர் நா. பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் த. தனசேகரன், மாநில பொருளாளர் கே. கோவிந்தராஜ் ஆகியோர் உரையாற்றினர்.