விழுப்புரம்,ஜன.25- விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர் அருகே உள்ளது காந்தலவாடி கிராமம். இங்கு தார் தொழிற்சாலை அமைய உள்ளது. இதனால் விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் ஏரிக்கு அருகே நீர் ஆதார மும் பாதிக்கும் அபாயம் உள்ளது. அந்த ஆலைக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விழுப்பு ரத்திற்கு வருகை தந்த தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநிலத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப் பினருமான பி.சண்முகம், தொழிற்சாலை அமைய விருக்கும் கிராமத்திற்கு சென்று பார்வையிட்டார். பிறகு செய்தியாளர் களை சந்தித்த அவர், “ விவசாயமும் பொது மக்களை பாதிக்கும் வகை யில் தார் தொழிற்சாலை அமைக்கும் நடவடிக் கையை எதிர்க்கிறோம். மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன், பி.குமார் எஸ்.முத்துக் குமரன், எஸ்.கீதா , மாவட்ட குழு உறுப்பினர்கள் கே. வீரமணி வட்ட செயலாளர் எஸ்.கணபதி, விவசாயிகள் சங்கம் வட்ட செயலாளர் பி.தங்கவேல், சிபிஎம் வட்ட குழு பி.பழனி ஆகியோர் உடனிருந்தனர்.