சென்னை யானைக்கவுனி கல்யாணபுரம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை பயனாளிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு. மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், துணை மேயர் மகேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, நிர்வாக இயக்குநர் சு.பிரபாகரன், அரசு செயலாளர் சி.சமயமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.