districts

img

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றவும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைபடுத்த கோருதல் உள்ளிட்ட 12அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பி.ஜெயப்பிரகாஷ் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.அஜிஸ்குமார் மகளிர் அணி செயலாளர் கே.ஜி.தேவி முன்னிலை வகித்தனர்.  மாநில தலைமையிடச் செயலாளர் ஏ.ராவணன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.