புதுச்சேரி, ஏப். 13- ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறை தலைமை யகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அடுத்துள்ள பெரிய காலாப்பட்டு ராஜீவ் காந்தி வீதியை சேர்ந்த மீனவர் வேலு, இவரது மனைவி அபிராமி (35) ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த வர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட னர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்ப வர் ஞானசேகர் சுதா தம்பதி யினர். இவர்கள் மீன் கழிவு களை வாய்க்காலில் வீசி விடுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அபிராமி பெரியக்காலாப்பட்டு மீனவ பஞ்சாயத்தாரிடம் தெரி வித்துள்ளார். அதன்படி சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாய்த்து பேச இருவரை யும் அழைத்திருந்தனர். அப்போது பஞ்சாயத்தார் வேலுவையும், அபிரா மியையும் தாக்கியதாகக் கூறப்பட்டுகிறது. மேலும் மீனவ பஞ்சாயத்தார் வேலு வையும், அபிராமியையும் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக கூறியுள்ளனர். இதனால் அவர் தொழிலுக்கு போக முடியாமல் சிரமப்பட்டுள் ளார். இதுகுறித்து வேலு காலாப்பட்டு காவல் நிலை யத்தில் புகார் அளித்தார்.
காவல் துறையினர் பஞ்சா யத்தாரை அழைத்து இப்படி யாரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்க கூடாது என கண்டித்துள்ளனர். ஆனாலும் பஞ்சாயத்தார் தொடர்ந்து அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனனர். இந்நிலையில் வேலு, தனது மனைவி அபிராமி மற்றும் மகள்களுடன் புதுச் சேரி கடற்கரை அருகே உள்ள காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட் டார். காவல் துறையி னர் அவர்களை சமாதானப் படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து தர்ணா வில் ஈடுபட்டனர். இதை யடுத்து காவல் துறையினர் அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக எழுப்பி னர். பி்ன்னர் டிஜிபி அலுவல கத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஊரை விட்டு ஒதுக்கி வைத்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி யளித்தனர். காவல்துறை யினரின் உத்தரவாதத்தை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அவர்கள் காவல்துறை உதவியுடன் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.