அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பள்ளி சீருடை தைக்கும் பணியை தனியாருக்கு கொடுப்பதை எதிர்த்தும், மீண்டும் தையல் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்பூரில் கையெழுத்து இயக்கம் ஞாயிறு அன்று ( ஜூன் 16 )நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் புஷ்பலதா, மாவட்ட துணைச் செயலாளர் லிங்கன், மாவட்டக் குழு உறுப்பினர் வேளாங்கண்ணி, கன்னியம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.