செங்கல்பட்டு, ஆக.1- சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடனை நிறுத்தி வைத்துள்ள ஒன்றிய அரசை கண்டித்து ஆக.29 அன்று மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு கூட்டம் புதனன்று (ஜூலை 31) செங்கல்பட்டில் எஸ். சந்தியாகு தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் ஆர். தெய்வராஜ், சாலையோர வியாபாரிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பி.கருப்பையன், செங்கல்பட்டு சிஐடியு மாவட்டச் செயலாளர் பகத்சிங் தாஸ், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் செல்வி, விஜய லக்ஷ்மி, கலைச்செல்வி, யோபு ராஜ், மோகன், செல்வம், சங்க மேஸ்வரன், ரெங்கராஜ், சங்கர், மணி மாறன், வீரய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் நிறை வுரையாற்றினார். கோரிக்கைகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி களில் நகர வெண்டிங் கமிட்டி தேர்தலை மாநில முழுவதும் ஒரே நாளில் உடனடியாக நடத்திட வேண்டும், சாலையோர வியாபாரிகளை பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமாக அப்புறப்படுத்துவத்தை கைவிட வேண்டும் , சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் இலவச தள்ளுவண்டி வழங்கவேண்டும், இந்த வியாபாரிகளுக்கு பிஎம் பிஎம் ஸ்வாநிதியில் இருந்து ரூ.10 ஆயிரம், 20 ஆயிரம், 50 ஆயிரம் வழங்கி வந்தனர். தற்போது கடன் தவணை தொகை கட்டி முடித்தவர்களுக்கும், புதிதாக கடன் தொகைகேட்டு விண்ணப்பித்த வர்களுக்கும் கடன் வழங்க மறுத்து வரு கிறார்கள் எனவே ஏற்கெனவே வழங்கியது போல் விண்ணப்பித்த அனைவருக்கும் கடன் தொகையை வழங்கிடவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநில ஒருங்கி ணைப்பு குழு கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டது மேலும் இந்த தீர்மானங்களை வலி யுறுத்தி ஆகஸ்ட்-29 அன்று மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.