districts

சாலையோர வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி

சென்னை,ஏப்.5- சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிக ளில் வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி  அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தி, பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்ட 27,135 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள நகர விற்பனை குழு மூலமாக 905 இடங்களை விற்பனை செய்யக்கூடிய மண்டலங்களாகவும் 4,700 இடங்களை விற்பனை செய்யக்கூடாத மண்டலங்களாகவும் டிசம்பர் 2021ல் அறிவிக்கப்பட்டது. இந்த விற்பனை மண்டலங்களில் மாநகராட்சியால் வழங் கப்பட்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வியாபாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். சென்னை மாநகராட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடையும் நிலையில் உள்ளது. நடப்பு ஆண்டில் புதிதாக சாலையோர வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி,  அடையாள அட்டை வழங்குதல், விற்பனை செய்யக்கூடிய  மண்டலங்களில் அடிப்படை திட்டம் வகுத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள இ-டெண்டர் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கண்டறியப்படும் சாலையோர வியாபாரி களுக்கு உரிய அடையாள அட்டை மற்றும் விற்பனைச் சான்று  உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.