districts

img

70 வயது ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம்

மதுராந்தகம், ஆக.19- 70வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது.  தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதி யர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட 4ஆவது பேரவை ஞாயிறன்று( ஆக.18 ) மாவட்டத் தலைவர் என்.இளங்கோ தலைமையில் மதுராந்தகத்தில் நடை பெற்றது. சு. ரவிச்சந்திரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார், மாநில செயற்குழு உறுப்பினர் வி.பொன்னுசாமி அனை வரையும் வரவேற்றார், பேரவையை துவக்கி வைத்து சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கி. இள மாறன் பேசினார். ப. பன்னீர்செல்வம் வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் ஜெ. செல்வன் வரவு, செலவு அறிக்கையும் சமர்ப்பித்த னர். அரசு ஊழியர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சி.முக மது உசேன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் ந.மகா லட்சுமி, ஆகியோர் வாழ்த்தி பேசினர். கூட்டத்தை நிறைவு செய்து அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் குப்பன் பேசி னார். மாவட்ட இணைச்செய லாளர்  செல்வம் நன்றி கூறினார். தமிழக அரசின் தேர்தல் கால வாக்குறுதிகளான புதிய ஓய்வூதிய திட்ட த்தை ரத்து செய்ய வேண்டும், 70 வயதில் கூடு தல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.