கள்ளக்குறிச்சி, நவ.4- தலித் உரிமைகளுக்கான உச்சி மாநாட்டின் கூட்டமைப்பு மாவட்ட ஆலோ சனை கூட்டம் தலித் உச்சி மாநாட்டின் கூட்ட மைப்பு மற்றும் தலித் பெரியாரிய முற்போக்கு அமைப்புகள் சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.வெங்கடேசன் தலைமை வகித்தார். தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன் துவக்கி வைத்து பேசினார். முன்னணியின் மாவட்டத் தலைவர் வி. ராஜா, செயலாளர் வே. ஏழுமலை, பொரு ளாளர் பி.தெய்வீகன், இரா. மதியழகன்( விசிக), பிரபு (தபெதிக), ராஜா (புரட்சி பாரதம்), பிரமிளா கீதா மேரி ( தலித் மண்ணுரிமை இயக்கம்), வி.பெரியசாமி (அம்பேத்கர் மக்கள் இயக்கம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.