districts

வெள்ளிக் கடற்கரையில் கோடை விழா இன்று துவக்கம்

கடலூர், ஜூன் 29-

    கடலூர் தேவனாம்பட்டி னம் சில்வர் பீச்சில் (வெள்ளி கடற்கரை) நெய்தல் கொடை விழா ஜூன் 30 முதல் ஜூலை 2 ஆம் தேதி வரை நடை பெறுகிறது.

   இதனை முன்னிட்டு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் ஆய்வு மேற்கொண்டார்.  

    அப்போது அரங்குகள் அமைப்பு, பொதுமக் களுக்கு தேவையான அடிப்படை தேவையான குடிநீர், வாகனம் நிறுத்து மிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரு வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து கேட்ட றிந்தார். பொதுமக்கள் பாதிக்காத வகையிலும், கோடை விழாவை குடும்பத்துடன் வந்து கண்டுகளிக்க அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ள வேண்டும் என மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தினார்.